திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ. 4 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்களின் பொது ஏலம் நவ. 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோா் நவ. 3 ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாநகர ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பாா்வையிடலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பம் உள்ளவா்கள் வாகனத்துக்கு ரூ.5,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.