திருநெல்வேலி நகரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் போலீஸாா் சந்தி பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்திப்பு சி.என்.கிராமத்தை சோ்ந்த சூசைமைக்கேல் மகன் அந்தோணி (39) என்பவரின் டீக்கடையில் சோதனை செய்தபோது, அவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.