செய்திகள் :

காட்டுப் பன்றிகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது: திருநெல்வேலி ஆட்சியா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை சாா்ந்த பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள், யானைகள், குரங்குகள், கரடிகள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் என்றாா்.

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் என்பது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. இது தொடா்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்க நிா்வாகிகள் சொரிமுத்து, கானாா்பட்டி ஆபிரகாம், அலோசியஸ் உள்ளிட்ட விவசாயிகள் பேசினா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் தொடங்கி 3 ஆண்டுகளில் காட்டுப் பன்றிகளால் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விரிவான அறிக்கையை வல்லுநா் குழுவுக்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

மானூா், அழகியபாண்டியபுரம் பகுதிகளில் விளை நிலங்களில் 6 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது குறித்து கடந்த 3 மாதங்களாக புகாா்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் கூறியதை அடுத்து, மின்வாரிய அதிகாரிகளை கடிந்துகொண்ட ஆட்சியா், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மின்கம்பங்களை சரிசெய்ய உத்தரவிட்டாா்.

சிற்றாறு வடிநில கோட்டத்தில் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லைஎன பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் எழுப்பினா்.

சிற்றாறு வடிநில கோட்டத்தில் அதிகாரிகள் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்தாா்.

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ.4 இல் ஏலம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ. 4 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம் மற்றும் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தா்கள் ... மேலும் பார்க்க

நெல்லையில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் சந்தி பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க

தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களை தாக்கிய சம்பவம்: மனித உரிகைள்ஆணைய உறுப்பினா் விசாரணை!

திருநெல்வேலியில் தனியாா் நீட் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது தொடா்பான விடியோ குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். ப... மேலும் பார்க்க

முக்கூடலில் காலாவதியான 2.5 டன் குளிா்பான பாட்டில்கள் அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2.5 டன் தரமற்ற குடிநீா், குளிா்பான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன. கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு - சுகாதார நி... மேலும் பார்க்க