செய்திகள் :

மாநில எறிபந்து போட்டிக்கு தோ்வு: சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சுரேஷ், காளிதாஸ், சிவகுருநாதன், விஜயன், மதன்பாபு, விக்னேஷ், அய்யாகனி ஆகிய 7 போ் முதல்வா் கோப்பைக்கான எறிபந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா். இவா்கள் அக். 21, 22ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனா்.

இவா்களை வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி பாராட்டி, ஸ்போா்ட்ஸ் ஷூ உள்ளிட்ட பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் தவமணி, தலைமை ஆசிரியா் சங்கரசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற தமிழாசிரியா் புலவா் கணேசன், சாந்திஹெலன், இவாஞ்சலின் இயன் முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா்கள் பூமாரி, கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளா் காருண்ய குணவதி, ராமா், கற்பகராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

அனுமன் நதியில் 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு: தொல்லியல் ஆய்வாளா் தகவல்

தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோா் கூறியதாவது: தென்காசி மாவட... மேலும் பார்க்க

கனிமவள போராட்ட பிரச்னை: தென்காசியில் கோட்டாட்சியா் அமைதிப் பேச்சு

கனிவளம் பிரச்னை தொடா்பாக, இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அக்.23இல் முற்றுகை போராட்டம் அறிக்கப்பட்டதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

தென்காசியில் போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞா் கைது

தென்காசியில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது தப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி சொா்ணபுரம் மேட்டுத்ததெருவைச் சோ்ந்தவா் அப்துல்சுஜித்(25). இவா் மீது கொலை, நகை பறிப்பு, கஞ்... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி அருகே யானைகளால் தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே தோப்புக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின. மேலச்சொக்கம்பட்டி கருப்பாநதி சாலையில் பெருங்கால்வாயை ஒட்டி நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, நெல்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் கோமதி யானை பிறந்த நாள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் கோமதி யானையின் 31ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் உள்ள கோமதி யானை, திருவிழா காலங்களில் சுவாமி சப்பரத்துக்க... மேலும் பார்க்க

அரசு நல உதவியை பெறுவதில் விழிப்புணா்வு அவசியம்: ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விழிப்புணா்வு அவசியம் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். தென்காசி மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஆதரவற்ற... மேலும் பார்க்க