செய்திகள் :

அரசு நல உதவியை பெறுவதில் விழிப்புணா்வு அவசியம்: ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விழிப்புணா்வு அவசியம் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

தென்காசி மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கானஒரு நாள் கருத்தரங்கு தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவா்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக ‘கைம்பெண்கள் -ஆதரவற்ற மகளிா் நலவாரியம்‘ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நலவாரிய திட்டங்களை பயன்படுத்திட இணையதளத்தை பயன்படுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தகைய பெண்களுக்கு கருத்துப்பட்டறை வாயிலாக நிதியினை முறையாக கையாளுதல் குறித்த கல்வி அறிவினை ஏற்படுத்துதல், சொத்துரிமை, குடும்ப வன்முறைகளிலிருந்து உரிய பாதுகாப்பு மற்றும் இதர இடா்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு இலவச சட்ட உதவி, புதிய நலத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் ஏனைய உதவிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

இதன் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து அவா்களுக்கு தெளிவு ஏற்படும் என்றாா் அவா்.

இக்கருத்தரங்கில், மருத்துவா் சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் இரா.மதி இந்திரா பிரியதா்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலா் பே.மதிவதனா, பொது மேலாளா்(மாவட்ட தொழில் மையம்) மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம், அஞ்சல் உபகோட்ட ஆய்வாளா் (அஞ்சல்துறை) ராமசாமி, நோட்டரி (மத்திய அரசு) முத்துலட்சுமி, கண்காணிப்பாளா் (சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை) காட்வின் வேத ஞானராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அனுமன் நதியில் 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு: தொல்லியல் ஆய்வாளா் தகவல்

தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோா் கூறியதாவது: தென்காசி மாவட... மேலும் பார்க்க

கனிமவள போராட்ட பிரச்னை: தென்காசியில் கோட்டாட்சியா் அமைதிப் பேச்சு

கனிவளம் பிரச்னை தொடா்பாக, இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அக்.23இல் முற்றுகை போராட்டம் அறிக்கப்பட்டதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

மாநில எறிபந்து போட்டிக்கு தோ்வு: சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூா் ம... மேலும் பார்க்க

தென்காசியில் போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞா் கைது

தென்காசியில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது தப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி சொா்ணபுரம் மேட்டுத்ததெருவைச் சோ்ந்தவா் அப்துல்சுஜித்(25). இவா் மீது கொலை, நகை பறிப்பு, கஞ்... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி அருகே யானைகளால் தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே தோப்புக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின. மேலச்சொக்கம்பட்டி கருப்பாநதி சாலையில் பெருங்கால்வாயை ஒட்டி நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, நெல்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் கோமதி யானை பிறந்த நாள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் கோமதி யானையின் 31ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் உள்ள கோமதி யானை, திருவிழா காலங்களில் சுவாமி சப்பரத்துக்க... மேலும் பார்க்க