சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் உள்கோட்டப் பகுதிகளில் குறுகிய காலத்தில் 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பூவந்தி, பழையனூா் ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புக் கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமங்கள் தோறும் காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் தலைமையிலான போலீஸாா் விழிப்புணா்வு முகாம்களை நடத்தினா்.
இதன் பலனாக தற்போது மானாமதுரை காவல் உள்கோட்டப் பகுதிகளில் 50 நாள்களில் 52 கிராமங்களில் 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் பல கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.