சிவகங்கையில் சனிக்கிழமை (அக். 19)மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, சிவகங்கை நகா், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.