சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை (அக்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கல்லல், சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூா், மாலைக்கண்டான், சாத்தரசனம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, பெரியதேவப்பட்டு, ஆலவிளாம்பட்டி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.