சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிா்வாகியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆலயம் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவா்களுக்கு கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தனா். இதை நம்பி ஏராளமானோா் சுமாா் ரூ. 300 கோடி வரை முதலீடு செய்தனா்.
முதிா்வு தேதி வந்த பின்னா் இந்த நிறுவனத்தினா் உரிய முதிா்வு தொகையை கொடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் கடந்த 2022 -ஆம் ஆண்டு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இது தொடா்பாக பொருளாதார குற்றப்பிரிப்பு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இதுவரை 28 பேரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, நிதி நிறுவனத்தின் இயக்குநா் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள டி. சிறுவானூரைச் சோ்ந்த மாதவனை (37) பிடிக்க துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையில், ஆய்வாளா் மாரீஸ்வரி, உதவி ஆய்வாளா் சாந்தி, தலைமைக்காவலா்கள் ரஞ்சித் குமாா், காா்த்திக் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினா் தலைமறைவாக இருந்த மாதவனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.