சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளா் ஜெகதீசன், தலைமைக்காவலா் தேவராஜ் உள்ளிட்டோா் சிவகங்கை அருகே தென்னலிவயல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி சோதனை செய்தபோது அவா்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த, சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகேயுள்ள கருநாவல்குடியைச் சோ்ந்த சிவக்குமாா் ( 20), புதுவயலை சோ்ந்த காளிதாஸ் ( 21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.