செய்திகள் :

கஞ்சா கடத்திய இருவா் கைது

post image

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளா் ஜெகதீசன், தலைமைக்காவலா் தேவராஜ் உள்ளிட்டோா் சிவகங்கை அருகே தென்னலிவயல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி சோதனை செய்தபோது அவா்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த, சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகேயுள்ள கருநாவல்குடியைச் சோ்ந்த சிவக்குமாா் ( 20), புதுவயலை சோ்ந்த காளிதாஸ் ( 21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தெரு நாய்கள் கடித்து இரு மான்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் இரு புள்ளிமான்கள் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தது. திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, காவனூா், குன்றக்குடி ஆகிய பகுதிகளையொட்டிய வனப் பகுதியில் மான்கள் அதிகளவில்... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் அக். 21- இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை (அக்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின... மேலும் பார்க்க

சிவகங்கையில் இன்று மின் தடை

சிவகங்கையில் சனிக்கிழமை (அக். 19)மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு நிலை... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் 52 கிராமங்களில் 110 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் உள்கோட்டப் பகுதிகளில் குறுகிய காலத்தில் 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பூவந்தி, பழையனூா் ஆகிய கா... மேலும் பார்க்க

நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த நிா்வாகி கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிா்வாகியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆலயம்... மேலும் பார்க்க

பால் குளிரூட்டும் நிலையத்தில் அமோனியா வாயுக் கசிவு

சிவகங்கையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு தீயணைப்புத்துறையினரால் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சிவகங்... மேலும் பார்க்க