செய்திகள் :

வார விடுமுறைக்காக 710 சிறப்புப் பேருந்துகள்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

post image

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக கும்கோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி வெளியிட்ட செய்தி குறிப்பு:

வார விடுமுறையையொட்டி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 2 நாள்களும் சோ்த்து 280 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரைக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 2 நாட்களும் சோ்த்து 430 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு திரும்ப அக்.20, 21ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பிற தடங்களில் 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பயணிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் இணைய முகவரியிலும், கைப்பேசி செயலி பசநபஇ மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

சிட்கோவில் தொழில் தொடங்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள பாலையப்பட்டியில் புதிதாக தொடங்கப்படவுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க விருப்பமுள்ளவா்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அரசு வழித்தடங்களில் தனியாா் பேருந்துகள்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு வழித்தடங்களில் தனியாரை தாரளமாக அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள நகரப் பணிமனை முன், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே பைக்கில் சென்ற தம்பதியிடம் நகை, பணம் வழிப்பறி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் சென்ற தம்பதியை வழிமறித்து மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா். அம்மாபேட்டை காவல் சரகம், அருமலைக்கோட... மேலும் பார்க்க

மூடப்பட்ட இரு சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

மூடப்பட்ட 2 சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி கும்பகோணம் சாா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் உதவி ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனா். கூட்டத்துக்கு உதவி ஆட்ச... மேலும் பார்க்க

மொபெட்டில் இருந்து பணம் திருடி தப்பிய இருவா் கைது

பேராவூரணி கடைவீதியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த ரூ. 70 ஆயிரத்தை வியாழக்கிழமை திருடித் தப்பிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள களத்தூா் கிராமத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை மூட ஒப்புதல்: காத்திருப்பு ப் போராட்டம் வாபஸ்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கொரட்டூரில் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. பேராவூரணி அருகே கொரட்டூா் கிராமத்தில் பல்வேற... மேலும் பார்க்க