செய்திகள் :

வேளச்சேரி-பெருங்குடி ரயில் நிலைய சாலையை மாநகராட்சி பராமரிக்கும்

post image

வேளச்சேரி-பெருங்குடி இடையே உள்ள ரயில்வே இணைப்பு சாலையை மாநகராட்சி பராமரிக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆணையா் ஜெ.குமரகுருபரன் கூறியது:

சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள வேளச்சேரி - பெருங்குடி இடையே உள்ள இணைப்பு சாலையில் அதிகளவில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதியில் தண்ணீா்தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதை சென்னை மாநகராட்சி சாா்பில் சீா்செய்ய அனுமதிக்கும்படி தெற்கு ரயில்வேக்கு அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இணைப்பு சாலையை சென்னை மாநகராட்சி பராமரிக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் அந்த பகுதியில் சாலை அமைப்பது, தூய்மைப் பணி உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும். மேலும், பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் நடைபாதை, மின்விளக்கு, இருக்கை மற்றும் மழைநீரை சேகரிக்கும் வகையில் அருகே சிறு குளங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில... மேலும் பார்க்க

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க