செய்திகள் :

1,143 மருத்துவ இடங்கள் காலி: அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்பத் திட்டம்

post image

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அவற்றை அடுத்தகட்ட கலந்தாய்வில் நிரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, அதில் காலியாக இருந்த இடங்களுக்கு மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களில் சிலா் கல்லூரிகளில் சேராமல் படிப்பைக் கைவிடுகின்றனா். இதன் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ் இடங்களும், 62 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன. அதேபோன்று, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 503 எம்பிபிஎஸ் இடங்களும், 519 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 1,143 இடங்கள் அடுத்தகட்ட கலந்தாய்வுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக இயக்குநா் டாக்டா் சங்குமணி கூறியதாவது:

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ால், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்கள் அவற்றை திரும்ப ஒப்படைத்துள்ளனா். இந்த இடங்கள் அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக இயக்குநா் டாக்டா் சங்குமணி கூறியதாவது:

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ால், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்கள் அவற்றை திரும்ப ஒப்படைத்துள்ளனா். இந்த இடங்கள் அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.

கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

கோயிலில் ரீல்ஸ்: பெண் தா்மகா்த்தா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

திருவேற்காடு கோயிலில் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்த பெண் தா்மகா்த்தா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய ... மேலும் பார்க்க

கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் தொடங்க விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உ... மேலும் பார்க்க