செய்திகள் :

12 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவர் கைது!

post image

புது தில்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தில்லியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 38), இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் அந்த சிறுமியின் தாயருக்கும் சம்பந்தமுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி ஷாலிமார் பாக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடந்த பிப்.25 அன்று தில்லியிலுள்ள குற்றவாளியின் வீட்டில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது தாயார் அனில் மும்பை நகரத்துக்கு குடிபெயர்ந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போலீஸார் அவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசினால் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் தில்லிக்கு நேரில் வந்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

இந்நிலையில், கடந்த மார்ச் 16 அன்று அனில் தில்லி வந்துள்ளதாகவும் அவர் ஹைதர்பூர் பகுதியில் தலைமறைவாகவுள்ளதாகவும் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் அவரது தங்குமிடத்தை சோதனை செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் அந்த சிறுமியின் தாயாரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர்கள் இருவரின் மீதும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கிழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்திந் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்... மேலும் பார்க்க

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: இபிஎஸ் வாழ்த்து

சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க

அணையில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயம்!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவப்புரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகியுள்ளனர். மாட்டாடிலா அணைப்பகுதியிலுள்ள தீவில் அமைந்துள்ள சித்தா பாபா கோயிலுக்கு இன்று (ம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) மட்காம் எர்ரா பாபு (வயது 26), சோடி தேவா (35) மற்றும் மட்காம் ஹத்மா (4... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (மார்ச் 18) தெரிவித்து... மேலும் பார்க்க