செய்திகள் :

14 மாவட்டங்களில் இன்று கனமழை!

post image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது. மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது.

ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. நாளை புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை..

இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.24ல் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

சுந்தரி தொடர் விரைவில் முடிகிறது!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடர் விரைவில் முடியவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுந்தரி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக படப்பிடிப்பு செய்ய குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சுந... மேலும் பார்க்க

தீபாவளி: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு நவ. 3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு புறப... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

டானா புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், இன்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.டானா புயல் முன்னெச... மேலும் பார்க்க

உச்சகட்ட பாதுகாப்பில் தமிழகம்! 8 மாவட்டங்களில் உளவுத் துறை கண்காணிப்பு!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத சதித் திட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

நெருங்கும் தீபாவளி: ஆடுகள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆட்டுச் சந்தைகளில், அமோகமாக விற்பனையாகும் ஆடுகள். ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்.தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக... மேலும் பார்க்க

வேலூரில் கைதி சித்ரவதை: டிஐஜி, 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் சரக சிறைத்துறை முன்னாள் டிஐஜி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன... மேலும் பார்க்க