செய்திகள் :

28 மீ. உயரம்... புதிய சாதனை படைத்த தில்லி மெட்ரோ!

post image

மெட்ரோ வழித்தடத்தை 28.37 மீட்டர் உயரத்தில் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடமானது, மெட்ரோ ரயில் செல்லும் மிக உயரமான வழித்தடம் இதுவாகும்.

தில்லியில் 4ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று தீவிரமாக வருகின்றன. இதில் சமய்பூர் - மில்லினியம் சிட்டி சென்டர் - குருகிராம் பகுதிகளை இணைக்கும் வகையில் ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் மெட்ரோ (மஞ்சள்) வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

நகரத்தின் வெளிவட்டச் சாலையில் அமைக்கப்படும் இந்த மெட்ரோ வழித்தடமானது 28.37 மீட்டர் உயரத்தில் பாலம் அமைத்து திட்டமிடப்பட்டது. இதனை வெற்றிகரமாகவும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம் தில்லியில் மிக உயரமான மெட்ரோ வழித்தடம் என்ற சாதனையை கைதர்பூர் பட்லி மோர் மெட்ரோ பெற்றுள்ளது.

இதற்கு முன்பு தெளலா குவான் (பிங்க்) வழித்தடமே மிக உயரமானதாக (23.6 மீட்டர்) இருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஹைதர்பூர் பட்லி மோர் மெட்ரோ வழித்தடம் 52.288 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்

கேரளம்: தண்டவாளத்தில் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி: இருவா் கைது

கேரள மாநிலம் கொல்லம் அருகே ரயில் தண்டவாளத்தில் தொலைத்தொடா்பு சேவையில் பயன்படுத்தும் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். கேரளத்தில் மட்டுமின்றி நாட்... மேலும் பார்க்க

மேகாலயம்: சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினா் கைது

சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினரை மேகாலயம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கைது செய்தது. முன்னதாக, இவா்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கட்டடப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு வங்கதேசத்துக்... மேலும் பார்க்க

அகமதாபாதில் ஏப். 8,9 -தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா் அதி... மேலும் பார்க்க

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளாக இந்திய நிறுவன மருந்துகள்: உற்பத்தி அனுமதியை திரும்பப் பெற டிசிஜிஐ உத்தரவு

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளைப் போல, இந்திய நிறுவனம் ஒன்றின் மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்த மருந்துகள் உற்பத்திக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு அனைத்து மா... மேலும் பார்க்க

அநீதிக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது: கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி

சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது என மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி தெரிவித்தாா். நரம்பியல் மருத்துவ முன்னோடி டாக்டா... மேலும் பார்க்க

வாக்குப் பதிவை அதிகரிக்க அமெரிக்க நிதி பயன்படுத்தப்படவில்லை: நிதியமைச்சகம் விளக்கம்

‘சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு (யுஎஸ்எயிட்) வழங்கிய ரூ.6,490 கோடி நிதியில் 2023-24-ஆம் ஆண்டில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அவை இந்தியாவில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்காக பயன்படு... மேலும் பார்க்க