செய்திகள் :

Aamir Khan: கிஷோர் குமாரின் சுயசரிதை படத்தில் நடிக்கிறாரா ஆமீர் கான்?

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து 6 படங்கள் அவரது பரிசீலனையில் இருக்கின்றன. அதில் பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமும் ஒன்றாகும்.

வழக்கறிஞர் உஜ்வல் நிகம் வாழ்க்கை வரலாற்றுப் படம், கஜினி 2, லோகேஷ் கனகராஜ், சோயா அக்தர் ஆகியோர் இயக்கும் படங்கள் இதில் அடங்கும். இதில் முதல் கட்டமாக மூன்று படங்களில் நடிக்க ஆமீர் கான் முடிவு செய்துள்ளார். கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் அனுராக் பாசு இயக்குகிறார். அப்படத்தை பூசன் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கிஷோர் குமார் கதாபாத்திரத்தில் நடிகர் ஆமீர் கான் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இரு தரப்பிலும் நான்கு முறை சந்தித்துப் பேசிவிட்டனர். இப்பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.

கிஷோர் குமார்

கிஷோர் குமாரின் தீவிர ரசிகராகக் கருதப்படும் ஆமீர் கான் அவரது வாழ்க்கையைப் படமாக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். கொரோனா காலத்திலும் நடிகர் ஆமீர் கான் மற்றும் ரன்பீர் கபூரை வைத்து ஒரு படம் எடுக்க அனுராக் பாசு முயன்றார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. கிஷோர் குமாரின் சுயசரிதை படத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதாக இருந்தது. அதுவும் கைகூடவில்லை. ஆமீர் கான் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது லாகூர் 1947 என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். சிறந்த பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார் கிஷோர் குமார். பெங்காலி, மராத்தி, இந்தி, குஜராத்தி, கன்னடம், போஜ்புரி, மலையாளம், ஒடிசா, உருது மொழிகளில் பாடி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

"உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம்" - திகார் சிறையிலிருந்து கரண் ஜோகருக்கு சுகேஷ் கடிதம்

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் தனது படத் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வெளியிலிருந்து முதலீடு பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது நிறு... மேலும் பார்க்க

Salman Khan: "சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தவறு" - மன்னிப்பு கேட்டு மீண்டும் மெசேஜ்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சல்மான் கானை கொ... மேலும் பார்க்க

``100 கிலோவை தாண்டிய எடை.. மனஅழுத்தம் அதிகமானது'' - பிரசவ கால அனுபவம் பகிர்ந்த சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உள்பட ஏராளமான மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தொழிலதிபர் அக்‌ஷய் வார்தே என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு சொந்த வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை... மேலும் பார்க்க

ரூ.250 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 மாடி பங்களா; விரைவில் குடியேறும் ரன்பீர் கபூர்-ஆலிபா பட் தம்பதி!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி மும்பை பாந்த்ராவில் ரூ.250 கோடியில் 6 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி பங்களா கட்டி வந்தனர். இக்கட்டடத்தின் கட்டுமானப் பணியை கபூர் தம்பதி அடிக்கடி சென்று பார்த்து வ... மேலும் பார்க்க

SRK: "இறுதி மூச்சு வரை நடிப்பேன்; யாராவது ஆக்‌ஷன் சொல்ல நான் சாக வேண்டும்..." - ஷாருக்கான் விருப்பம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகி... மேலும் பார்க்க

Salman Khan: "ரூ. 5 கோடி கொடுக்காவிட்டால்...." - சல்மான் கானுக்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இக்கொலை மிரட்டல் காரணமாக சல்மான் கான் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடனேயே வெளியில் வருகிறார். ... மேலும் பார்க்க