செய்திகள் :

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர்தான் நீதிமன்றம் நியமித்த நடுவராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இவரது போலி நீதிமன்றம் செயல்பட்டு வன்ந்துள்ளது.

2019ம் ஆண்டு நிலத் தகராறு வழக்கில் இவர் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். பின்னாளில் இதே வழக்கு அகமதாபாத் குடிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த ஏமாற்றுக்காரரைப் பற்றி தெரியவந்துள்ளது.

போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர்

நீதிமன்றப் பதிவாளர் ஹர்திக் தேசாய் அளித்த புகாரின் அடிப்படையில், மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் மீது ஐ.பி.சி பிரிவு 171 (அரசு அதிகாரி பதவியில் இருப்பதுபோல காட்டிக்கொள்ளுதல்) மற்றும் பிரிவு 419 (ஆள் மாறாட்டம்) ஆகிய சட்டங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மோரிஸ் சாமுவேல் மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் நிலத் தகராறு வழக்கு நிலுவையில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து ஏமாற்றியிருக்கிறார். ஏமாறுபவர்களிடம் வழக்குகளைத் தீர்ப்பதற்கான கட்டணமாக ஒரு தொகையை வசூலித்துள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மோரிஸ் முதலில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடுவராக தன்னை அறிமுகம் செய்துகொள்வார். பின்னர் தன்னுடைய நீதிமன்றம் போல செட் செய்யப்பட்ட அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று குறிப்பிட்ட நபருக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர்

மோரிஸ் சாமுவேலின் நடவடிக்கைகள் உண்மை எனத் தோன்ற வைப்பதற்காக அவரது கூட்டாளிகளே வழக்கறிஞர்களாகவும், நீதிமன்ற ஊழியர்கள் போலவும் செயல்பட்டுள்ளனர்.

இப்படி நூதனமான நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்றிவந்த மோரிஸ் இறுதியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் கூடுதல் விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: "பிஷ்னோய்யை என்கவுன்ட்டர் செய்யும் போலீஸுக்கு சன்மானம்" - கர்மி சேனா சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் டெல்லி மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அரசு தன... மேலும் பார்க்க

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது... 17 ஆக உயர்ந்த மொத்த கைது; அதிர்ச்சி பின்னணி

கோவை, கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதன் பின்னணிய... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: போலியான அரசு முத்திரை, கையொப்பம், ரசீது - காவல்துறையை அதிரவைத்த கனிமவள கடத்தல் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை வெட்டிஎடுத்து கேரளாவுக்குக் கடத்தும்கனிம வள கடத்தல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிக... மேலும் பார்க்க

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க