செய்திகள் :

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது... 17 ஆக உயர்ந்த மொத்த கைது; அதிர்ச்சி பின்னணி

post image

கோவை, கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் உயிரிழந்தார்.  இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதன் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இருப்பது தெரியவந்தது.

கோவை கார் வெடிப்பு

இவ்வழக்கில் ஏற்கெனவே 14 பேர் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.  இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மேலும் 3 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. அரபுக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த அபூ ஹனிபா மற்றும் பவாஸ் ரஹ்மான், சரண் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

இவர்கள் ஜமேஷா முபினுக்கு பொருளாதார உதவி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களையும் பரப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் என்ஐஏ அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர். இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பிறகு அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

கைது

இதன்மூலம் கோவை  கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: "பிஷ்னோய்யை என்கவுன்ட்டர் செய்யும் போலீஸுக்கு சன்மானம்" - கர்மி சேனா சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் டெல்லி மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அரசு தன... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: போலியான அரசு முத்திரை, கையொப்பம், ரசீது - காவல்துறையை அதிரவைத்த கனிமவள கடத்தல் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை வெட்டிஎடுத்து கேரளாவுக்குக் கடத்தும்கனிம வள கடத்தல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிக... மேலும் பார்க்க

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க

`ஜாமீன் கிடையாது' - பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத... மேலும் பார்க்க