செய்திகள் :

Kayal & Siragadikka aasai: உயிருக்குப் போராடும் மூர்த்தி | ரோகிணியின் அடுத்த வில்லத்தனம்

post image

சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லத்தனம் செய்வதில் ரோகிணி விஜயாவை முந்திவிட்டார். விஜயா படபடவென பேசுவார். மற்றபடி திருட்டு வேலைகள் செய்வது, சதி செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களைச் செய்யமாட்டார். ஆனால் ரோகிணி அப்படியில்லை. தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள எந்த எல்லைக்கு போவேன் என்னும் லெவலுக்கு இறங்கிவிட்டார். 


தன்னை பிளாக்மெயில் செய்யும் நபரை காலி செய்ய சிட்டியிடம் உதவி கேட்கிறார் ரோகிணி. ஆனால் முத்து, சத்யா ஆகியோரை பழிவாங்க சிட்டி ரோகிணியிடம் ஒரு டீலை முன் வைக்கிறார். முத்து மொபைலில் இருந்து சத்யா ஹேண்ட் பேக் திருடும் வீடியோவை அவருக்கு தெரியாமல் ரோகிணி எடுக்க வேண்டும். அப்படி செய்தால் சிட்டி ரோகிணியை மிரட்டும் நபரை விரட்டி அடிப்பார். இதுதான் டீல்.

சிறகடிக்க ஆசை

ரோகிணி முத்துவிடம் இருந்து மொபைலை எடுக்க பல முயற்சிகள் எடுத்துவிட்டார்.  இம்முறை முத்துவுக்கு மது கொடுத்து, அவர் சுயநினைவில் இல்லாத சமயத்தில் மொபைலை எடுக்கப் போகிறார். மனோஜ் தன் கடைக்கு ஒரு பெரிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்கிறார்.

பெரிய பிஸ்னஸை ஈர்க்கவும், அவரின் கடையை பிரபலப்படுத்தவும் மனோஜ், ரோகிணி சேர்ந்து 5 ஸ்டார் ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றனர். மனோஜின் நண்பர் சில பெரிய பிரமுகர்களை அழைத்து வர திட்டமிட்டிருக்கிறார்.

அவர்களிடம் மனோஜின் குடும்பம் மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்று பொய் சொல்லி இருக்கிறார். எனவே மனோஜ் அந்த பொய்யை நம்ப வைக்க வீட்டில் இருக்கும் அனைவரையும் பணக்காரர்களை போன்று உடை அணிந்து வர சொல்லப் போகிறார்.

சிறகடிக்க ஆசை

இந்த நிகழ்வின் போது தான் ரோகிணி முத்துவுக்கு மது அருந்த வைக்க திட்டமிட்டிருக்கிறார். ஒருவேளை முத்து மது அருந்திவிட்டால் கண்டிப்பாக நிகழ்ச்சியில் ஏதாவது பிரச்னை வரும். மனோஜின் பிஸ்னஸ் திட்டங்கள் பாதிக்கப்படும். ஆனாலும் ரோகிணிக்கு அதைவிட முத்துவின் மொபைல் எடுப்பது தான் முக்கியம். 

மற்றொருபுறம் முத்து - மீனா சேர்ந்து சீதாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை பார்க்க செல்கின்றனர். அவர் பேசுவது, கண்டிஷன் போடுவது எதுவுமே மீனாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் முத்து இதில் சீதா தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். எனவே சீதாவின் கல்யாணம், மனோஜின் பிஸ்னஸ் நிகழ்வு என அடுத்தடுத்து சுவாரஸ்யமான காட்சிகள் வரும் என எதிர்பார்க்கலாம். 

கயல்-எழில் திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டது. கயலின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்க மூர்த்தி மட்டும் வலியில் அவதிப்படுகிறார். தீபிகாவின் தந்தை கயலின் திருமணத்தை நிறுத்த மூர்த்தியை ஆள் வைத்து கொல்ல நினைக்கிறார். ஆனால் மூர்த்தி கத்திக்குத்து காயங்களுடன் உயிர் பிழைக்கிறார். கத்திக்குத்து காயத்திற்கு முதலுதவி மட்டும் செய்து கொண்டு வந்துவிடுகிறார்.

Kayal serial
கயல்

கயலை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பியவுடன் மூர்த்தி வந்து அமர, அவரின் தம்பி மூர்த்தி வலியில் துடிப்பதை கண்டுப்பிடித்து கேட்கிறார். மூர்த்தியை காரில் அழைத்து வந்த நபர் நடந்த உண்மைகளை சொல்கிறார். 

மற்றொருபுறம் கயல் எழில் வீட்டிற்கு செல்கிறார். அங்கு எழிலின் அம்மா விருப்பமின்றி அவர்களை வரவேற்கிறார். இன்று வெளியான ப்ரோமோவில், மூர்த்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் கயலுக்கு தெரியாது. மூர்த்தி மனைவியின் கையில் இருந்து குங்குமம் தவறுகிறது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக கயல் உணர்கிறார். மூர்த்தி பிழைப்பாரா? தீபிகாவின் அப்பா பிடிப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

BB Tamil 8: `தோழி செளந்தர்யாவுக்கு நான் சொல்லி அனுப்புன விஷயம்'- `பிக் பாஸ்' விஷ்ணு சொல்வதென்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அருண், நடிகை பவித்ரா, மாடல் சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன்... மேலும் பார்க்க

BB Tamil 8: `அருண் சொல்லிக் கொடுத்துதான் அர்ச்சனா டைட்டிலை வென்றாரா?' - ரவீந்தர் ஓப்பன் டாக்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன்ல் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ரவீந்தர். அவரை சந்தித்துப் பேசினோம்.ரவீந்தர் " எனக்கு இதுக்கு முன்னாடி ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 15: ஆண்கள் போட்ட டீலை, டீலில் விட்ட பிக் பாஸ்; இந்த வாரம் Mixed Nomination!

இப்போதைக்கு பெண்கள் அணியின் பக்கம் காற்று நன்றாக வீசுகிறது. தர்ஷிகா இரண்டாவது முறையாக கேப்டன் ஆகி விட்டார். ஆண்கள் அணியில் இரண்டு பேர் குறைந்து எண்ணிக்கையில் சுருங்கி விட்டார்கள். எனவே, ‘ஆண்கள் யாரையு... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ``அந்த சம்பவத்துக்குப் பிறகு என் ரஞ்சித் சிரிக்கவே இல்ல..!" - ப்ரியா ராமன்!

பிக் பாஸ் சீசன் 8 நடந்துக் கொண்டிருக்கிறது. `ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு' என தன்னுடைய பாணியில் களத்தை அழகாக நகர்த்தி கொண்டுபோகிறார், விஜய் சேதுபதி.முதல் வாரத்தில் சத்தமில்லாமல் அமைதியாகவே இருந்த ரஞ்ச... மேலும் பார்க்க

`சீதாவுக்குப் பதில் சுஜிதா' - சமையல் நிகழ்ச்சியில் நடத்த மாற்றத்தின் பின்னணி என்ன?

ஜீ தமிழ் சேனலில் சில தினங்களுக்கு முன் தொடங்கிய 'கிச்சன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியிலிருந்து நடிகை சீதா வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் நடித்த நடிகை சுஜிதா கமிட் ... மேலும் பார்க்க

நடிக்க வரும் முன்பே வில்லங்கம், வெளிநாட்டு ரசிகையுடன் காதல் - அர்னவைத் தொடரும் சர்ச்சைகள்

பிக்பாஸ் சீசன் 8 ல் இரண்டாவது வார எவிக்‌ஷன் நிகழ்ந்து அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது, 'உங்களுக்கு ஏதாவது நல்லது நடந்ததுன்னா, வாயாலேயே அதைக் கெடுத்துடாதீங்க' என விஜய... மேலும் பார்க்க