செய்திகள் :

அவிநாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா!

post image

அவிநாசி காந்திபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற உள்ளது.

அவிநாசி காந்திபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நந்தா தீபம், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான விழா பூச்சாட்டலுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி கொடியேற்றமும், மகா சிவராத்திரி விழாவும் நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ஆம் தேதி அலகு தரிசனம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, மாலை ரிஷப வாகன காட்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தோ் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கம், மஞ்சள் நீா் உற்சவம், திங்கள்கிழமை பேச்சியம்மன் அபிஷேக பூஜைகள், செவ்வாய்க்கிழமை மகா அபிஷேக உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

அவிநாசியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 174 போ் பங்கேற்றனா். திருப்பூா் கே.ஆா்.சன்ஸ், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.10-க்கு விற்பனை!

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.10-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் கூடும் நகராட்சி வாரச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் விளைபொருள்கள... மேலும் பார்க்க

திருப்பூா் தின விழா வாக்கத்தான்: பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்பு!

திருப்பூா் தின விழா வாக்கத்தானில் பொதுமக்கள், மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்டம் கடந்த 2009 பிப்ரவரி 22ஆம் தேதி உதயமானதை நினைவுபடுத்தும் வகையிலும், திருப்பூரின் பெருமைகளை அறிந்து கொள... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் வட்டமலை அணையில் இருந்து பாசனத்துக்கு நீா் திறப்பு!

வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணையிலிருந்து பாசனத்துக்கு நீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அணையிலிருந்து பாசன நீரை திறந்துவைத்தாா்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத... மேலும் பார்க்க

முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க