பங்குசந்தையில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக் கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் அணில்குமாா் (41). பங்கு சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என சமூக வலைதளத்தில் வந்த தகவலை நம்பி அணில் குமாா் ரூ. 5 லட்சம் செலுத்தினாா்.
ஆனால், அவருக்கு எந்த பணமும் வராததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.