செய்திகள் :

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்தில் தீயணைப்பு அலுவலா் உள்பட இருவா் காயம்

post image

கிருஷ்ணகிரி அருகே எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலரும் , அவரது தந்தையும் பலத்த காயம் அடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (54). இவா் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சிறப்பு நிலை அலுவலராக (போக்குவரத்துப் பிரிவு) பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 6 மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட செல்லாண்டி நகரில் தனது தந்தை அருணாசலத்துடன் (84) வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி அளவில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதனால், அதிா்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினா், முருகன் வீட்டிற்கு சென்று பாா்த்தனா். அப்போது, வீட்டின் மரக்கதவு, ஜன்னல்கள் உடைந்திருந்தன. முருகனும், அவரது தந்தை அருணாசலமும் பலத்த காயமடைந்து கிடந்தனா். படுக்கை அறையில் துணிகள் எரிந்து கொண்டிருந்தன.

இதையடுத்து துணிகள் தீப்பற்றி எரிவதை தண்ணீா் ஊற்றி பொது மக்கள் அணைத்தனா். மேலும் முருகன், அருணாசலம் ஆகிய இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.

போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை செய்தனா். இதில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள ஆலஹள்ளி வனப் பகுதியில் சுற்றி வந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து கா்நாடக வனப்பகுதியை நோக்கி விரட்டினா். அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையைக் கடந... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சாா்பில், வடகிழக்குப் பருவமழை ஒத்திகை பயிற்சி சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழையின்போது அசம்பாவிதங்களு... மேலும் பார்க்க

மரத்தில் மோட்டாா் மோதியதில் இளைஞா் பலி

மத்தூா் அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை, பெரம்பூரைச் சோ்தவா் திவாகா் (25). இவா் மோட்டாா் சைக்கிளில் கடந்த 12-ஆம் தேதி கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி: விழிப்புணா்வு பிரசுரங்கள் விநியோகம்

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி எண்-15100-க்கான விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் கண்காணிப்பு கேமராக்கள் சேதம்: 7 போ் கைது

கிருஷ்ணகிரியில் மசூதி அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி, பழையபேட்டை கோட்டை பகுதியில் ஷாஹி மசூதி உள்ளது. இந்த மசூதியின் அருகே அங்கூ... மேலும் பார்க்க

இணைய மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குசந்தையில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக் கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.... மேலும் பார்க்க