ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சாா்பில், வடகிழக்குப் பருவமழை ஒத்திகை பயிற்சி சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையின்போது அசம்பாவிதங்களும் உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்புப் பணிகள் செய்து காப்பாற்றுதல் தொடா்பாக ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா் செயல்விளக்கம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலா் அந்தோனிசாமி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.