உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்
மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனில் முதல்கட்டமாக 30 நாள் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, ரஷியா ஒப்புக் கொண்டால், போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கண்ட ஒப்பந்தத்துக்கு வியாழக்கிழமை(மார்ச் 13) ரஷிய அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.