செய்திகள் :

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் உளறுகிறார்: அமைச்சர் ராஜேந்திரன்

post image

சேலம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் ஏதேதோ உளறுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில் முதல்வர்

வாங்கிய மனுக்கள் மீது தற்போது வரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் மக்கள் சந்திப்பு திட்ட முகாமை நடத்தி மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதையும் படிக்க | வேலை ஏதும் இல்லாதவர் எடப்பாடி: முதல்வர் விமர்சனம்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தேர்தல் நேரத்தில் முதல்வரால் பெறப்பட்ட மனுக்களில் 90 சதவீத மனுக்கள் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராகவும் முதல்வராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி அவருடைய சொந்த தொகுதியிலேயே எதையும் நிறைவேற்றாததால் எடப்பாடி தொகுதியில் மட்டும் மூவாயிரம் மனுக்கள் குவிந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் சேலத்தை மட்டுமே சுற்றி சுற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் ஏதேதோ உளறுகிறார். அதையெல்லாம் நாங்கள் கண்டுகொள்ளவில்லை கலைஞர், அண்ணா வழியில் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வருகிறோம் என்றார்.

ஒரே கவிதை, ஏழாண்டுகள் சிறை! - கவிதைதான் குற்றம் - 3

உலக வல்லரசு நாடுகள் ஒன்றின் தலைநகர் அது. பன்னிரண்டு மில்லியனுக்கு மேல் (1.2 கோடி) மக்கள் வாழும், அப்பெருநகரில் அண்மைக்காலங்களில் ஆண்களின் நடமாட்டம் - ‘அறம் கைக்கொண்ட’ அரசியல்வாதியைக் காண்பதுபோல - அரித... மேலும் பார்க்க

வேலை ஏதும் இல்லாதவர் எடப்பாடி: முதல்வர் விமர்சனம்

பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளில் நாள்தோறும் தனது முகம் வரவேண்டும் என்பதற்காக, அரசை குறை சொல்லி எதையாவது உளறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவறுக்கு வேலை இல்லாததால் இதை தொடர்ந்து செய்கிறார் போலும்... மேலும் பார்க்க

கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்... மேலும் பார்க்க

மதுரையில் மழைநீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது: முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் 8 பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ததையொட்டி ம... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை போக்க காவலர்களுக்கு உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள்!

கோவை: காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல்துறை சனிக்கிழமை நடத்தியது. காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படு... மேலும் பார்க்க

ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா யானை!

கோவை: கோவை செம்மேடு, ஆலங்குட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டுயானை சிறுவாணி காட்டு ராஜா சனிக்கிழமை நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜாவை வனப்பகுதி... மேலும் பார்க்க