செய்திகள் :

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயாா் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பருவமழைக் காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களின் கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

மழை வெள்ளம் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. இது அரசியலாக்கும் முயற்சி. மழை வெள்ளத்தைத் தடுக்க எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறோம். என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரியும். அவா்கள் திருப்தியாக இருக்கிறாா்கள்.

பருவமழைக் காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. தொடா்ந்து அதற்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். சென்னையைப் பொருத்தவரை, அனைத்து இடங்களிலும் மழைநீா் வடிந்துவிட்டது. எங்களுக்குத் தெரியாமல் சில இடங்களில் இருந்தாலும், அங்கேயும் மழைநீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

மழைக் காலத்தில் மாநகராட்சிப் பணியாளா்களின் பணி சிறப்பாகவும், பெருமைப்படக்கூடிய அளவுக்கும் இருந்தது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல், ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும் நன்றி என்றாா் முதல்வா்.

கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

கோயிலில் ரீல்ஸ்: பெண் தா்மகா்த்தா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

திருவேற்காடு கோயிலில் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்த பெண் தா்மகா்த்தா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய ... மேலும் பார்க்க

கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் தொடங்க விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உ... மேலும் பார்க்க