செய்திகள் :

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

சுக்மா மாவட்டத்தில், கொய்மெண்டா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் இயங்கி வந்த தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம் குறித்து, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுக்மா மாவட்ட காவல் படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவினர் இணைந்து நேற்று (செப். 27) அப்பகுதியில் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த ஆயுத உற்பத்திக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் உற்பத்திக்கூடத்தில் இருந்து விதவிதமான துப்பாக்கிகளின் பாகங்கள், துப்பாக்கிகள் தயாரிக்கப் பயன்படும் கருவிகள் உள்பட ஏராளமான பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, நிகழாண்டில் (2025) சத்தீஸ்கரில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் மூலம் 249 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில், மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் என அறியப்படும் நம்பாலா கேஷவ் ராவ் (எ) பசவராஜு (வயது 70) என்பவரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உலகில் மோசமான 3-வது நகரம் பெங்களூரு! வெளியேறும் மக்கள்!

In the state of Chhattisgarh, a Maoist arms and explosives manufacturing facility has been destroyed by security forces.

70 வயதில் இப்படிப் பேசலாமா? -பாஜக அமைச்சரை விமர்சிக்கும் காங்.! என்ன நடந்தது?

70 வயதைக் கடந்துவிட்ட பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் ராகுல் - பிரியங்கா காந்தி உறவை விமர்சித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்திய பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும் அம்மாநில நகர்ப்பு... மேலும் பார்க்க

மணிப்பூரில் 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் அழிப்பு

மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன. மணிப்பூரின், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஷிஜா பொது உயிரியல் மருத்துவக் கழிவு சுத்திகர... மேலும் பார்க்க

அமைதி, மகிழ்ச்சியால் உலகம் நிரம்பட்டும்! மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் செய்தி

உலகம் முழுவதும் அமைதி மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும் என்று மாதா அமிர்தானந்தமயி, தன்னுடைய பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அம்மா என அன்புடன் மக்களால் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயிய... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி 5 மாணவர்கள் பலி!

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் கார் விபத்தில் 5 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில், சனிக்கிழமையில் தார் காரில் வேகமாக 6 பேர்... மேலும் பார்க்க

பிகாரில் 2வது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா!

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். இந்தாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பி... மேலும் பார்க்க

பாஜக அமைச்சர் மீது முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர அமைச்சர் ஜெயகுமார் ராவல், தங்களது பாரம்பரிய நிலத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மகாராஷ்டிரத... மேலும் பார்க்க