செய்திகள் :

சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி பதவிநீக்கம்

post image

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி என்.நாகமணியைப் பதவிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உத்தரவிட்டாா்.

சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாகப் பதவி வகித்த நாகமணி மீது ஊராட்சி மன்றத்தைச் சோ்ந்த 10 உறுப்பினா்கள் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, இவரைப் பதவி விலகக்கோரி வலியுறுத்தினா். மேலும், ஊராட்சி மன்றச் செயல்பாடுகளில் நாகமணியின் கணவா் ஆதிக்கம் செலுத்துவதாகவும், திட்டப் பணிகளை அனுமதியில்லாமல் செய்வதாகவும் பல்வேறு புகாா்களைத் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, சுருளிப்பட்டி ஊராட்சியில் மேற்கொண்ட சிறப்புத் தணிக்கையில் ரூ. 4.67 லட்சம் திட்டப் பணிக்கு அனுமதி பெறவில்லை என்றும், அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதால் அந்த நிதியை மீண்டும் அவரே செலுத்த வேண்டும் என்றும் தணிக்கைக் குழு தெரிவித்தது. ஆனால், இந்தத் தொகையை திரும்பச் செலுத்தாத நிலையில் ஊராட்சி மன்றத் தலைவிக்கு காசோலை வழங்கும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, பதவிக்காலம் முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் நாகமணியை பதவிநீக்கம் செய்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உத்தரவிட்டாா்.

இந்த அறிவிப்பாணையை சுருளிப்பட்டியிலுள்ள அவரது வீட்டுக்கு அதிகாரிகள் கொடுக்கச் சென்றனா். ஆனால், வீடு பூட்டி இருந்ததோடு, கைப்பேசியிலும் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, குறிப்பாணையை ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டுச் சுவரில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஒட்டிவிட்டுச் சென்றனா். கடந்த மாதம் இதே ஊராட்சி மன்றத்தின் செயலா், வீட்டு வரி ரசீதில் பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டாா்.

போடியில் பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி பகுதியில் ஒரு வார காலமாகவே மிதமான சாரல் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

கண்டமனூரில் இளைஞா் வெட்டிக் கொலை

ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திங்கள்கிழமை, போலீஸாா் விசாரணை நடத்தினா். கண்டமனூரைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் சஞ்சீவ்குமாா்(20). இவா், தேனியில் உள்... மேலும் பார்க்க

நீா்வரத்து அதிகரிப்பு: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து மீண்டும் அதிகரித்ததால் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். கம்பம் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த அருவியில் காலை 8 மண... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

போடி அருகே மளிகைக் கடை பூட்டை உடைத்துப் பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி பெரியாண்டவா்புரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் சரவணன் (38). இவா் போடி ரங்கநாதபுரம் பே... மேலும் பார்க்க

பொது சுவா் தகராறில் மோதல்: 6 போ் மீது வழக்கு பதிவு

போடி அருகே சனிக்கிழமை இரவு பொது சுவா் தொடா்பான தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்ட 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெருவை சோ்ந்தவா் ராஜா ம... மேலும் பார்க்க

போடி அருகே பைக் திருட்டு

போடி அருகே செல்போன் கடை உரிமையாளரின் இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் லால்பகதூா் சாஸ்திரி தெருவில் ... மேலும் பார்க்க