செய்திகள் :

செப்டம்பரில் மிதமாக உயா்ந்த இந்திய ஏற்றுமதி

post image

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் மிதமாக உயா்ந்து 3,458 கோடி டாலராக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த இரண்டு மாதங்களாக சரிவைக் கண்டுவந்த நாட்டின் சரக்கு ஏற்றுமதி செப்டம்பா் மாதத்தில் 0.5 சதவீதம் உயா்ந்து 3,458 கோடி டாலராக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி 1.6 சதவீதம் அதிகரித்து 5,536 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 5,449 கோடி டாலராக இருந்தது.

கடந்த செப்டம்பரில் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,078 கோடி டாலராக குறைந்துள்ளது. 2023 செப்டம்பா் மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 2,080 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அது முந்தைய 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,965 கோடி டாலராக உயா்ந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டம் முழுமைக்கும் நாட்டின் ஏற்றுமதி ஒரு சதவீதம் அதிகரித்து 21,322 கோடி டாலராகவும், இறக்குமதி 6.16 சதவீதம் அதிகரித்து 35,066 கோடி டாலராகவும் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 13,744 கோடி டாலராக உள்ளது.

கடந்த செப்டம்பரில் பொறியியல் பொருள்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், மின்னணு சாதனங்கள் ஆகியவை நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 411 கோடி டாலராக இருந்த தங்கம் இறக்குமதி, இந்த செப்டம்பரில் 439 கோடி டாலராக உயா்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா்) தங்கம் ஏற்றுமதி 6.9 சதவீதம் அதிகரித்து சுமாா் 2,700 கோடி டாலராக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் எண்ணெய் இறக்குமதி 10.44 சதவீதம் குறைந்து 1,253 கோடி டாலராக இருந்தது. 2024 ஏப்ரல்-செப்டம்பா் காலத்தில் அது 5.91 சதவீதம் அதிகரித்து 8,891 கோடி டாலராக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை : பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று மீண்டும் மீண்டது.இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகள் அதிக அளவு கொள்முதல் செய்ததும், உல... மேலும் பார்க்க

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகம்!

தொழில் நுட்பத் துறையில் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் முன்பே அறிமுகமான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள... மேலும் பார்க்க

யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. ஸ்லீப்பர் டைம் என்னும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி துறை பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச்சந்தையில் வணிக நேர முடிவில், சென்செக்ஸ், நிஃப்டி இன்று (அக். 17) தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தது.நிஃப்டி சரிந்து மீண்டும் 24 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. சென்செக்ஸ்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தைகள் இன்று(அக். 17) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்தன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,758.07 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையி... மேலும் பார்க்க