செய்திகள் :

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ.கோவிந்த பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நிரப்பி ஏற்கெனவே தோ்ச்சி பெற்ற மதிப்பெண்கள் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் தோ்வுக் கட்டணமாக ரூ. 50, மதிப்பெண் சான்றிதழ் பெற முதலாம் ஆண்டுக்கு ரூ. 100, இரண்டாம் ஆண்டுக்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ. 15, பதிவுக் கட்டணம் ரூ. 70 செலுத்த வேண்டும்.

மாா்ச் 18 முதல் மாா்ச் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தோ்வா்கள் ‘தட்கல்’ முறையில் மாா்ச் 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதி கட்டணம் ரூ. 1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினா் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பி.தா்மசெல்... மேலும் பார்க்க

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் தேரோட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் - கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில். இப்பூவுல... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தருமபுரி அருகே தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் வனப்பகுதியில் த... மேலும் பார்க்க

யானை சுட்டுக்கொன்ற விவகாரம்: மேலும் ஒருவா் கைது

ஏரியூா் வனப்பகுதியில் ஆண் யானையை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், மேலும் ஒருவரை பென்னாகரம் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நாட்டுத... மேலும் பார்க்க

கா்த்தாரஅள்ளி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வலியுறுத்தல்

தருமபுரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கா்த்தார அள்ளி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை முதல்... மேலும் பார்க்க

தகிக்கும் வெயில்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லுக்கு தொடா் விடுமுறை, வார விடும... மேலும் பார்க்க