செய்திகள் :

நீதிமன்றத்திலும் வந்துவிட்டது போலி.. எங்கே தெரியுமா?

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல்துறையினர், ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த முதல் தகவல் அறிக்கையில், கடந்த 2019 - 2024ஆம் ஆண்டு வரை போலியாக நீதிமன்றத்தை நடத்தி, பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளையும் பிறப்பித்திருப்பதாக மோரிஸ் சாமுவேல் என்ற நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் எத்தனையோ போலிகளை மக்கள் கேட்டிருப்பார்கள், போலி மருத்துவர், போலி அரசு அதிகாரி, போலி போலீஸ், போலியாக இயங்கி வந்த சுங்கச் சாவடி கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக.. (?) நாட்டில் போலியாக இயங்கி வந்த நீதிமன்றம் குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துடன் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த சம்பவத்தில், நீதிமன்றத்தை நடத்தி வந்த 37 வயது நபர் மோரிஸ் சாமுவெல் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது, முறைகேடு செய்தல், தவறான தகவல்களை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத் நீதிமன்ற நீதிபதி ஹார்திக் தேசாய் அளித்த புகாரின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா - சீனா மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்படுமா?

கிழக்கு லடாக்கில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா முன்வந்துள்ளது.சமீப காலங்களில், இந்தியா - சீனா இடையே நடைபெற்று வந்த மோதல்கள் தொடர்பாக... மேலும் பார்க்க

பிரியங்காவை விடச் சிறந்த பிரதிநிதியைக் கற்பனை செய்ய முடியாது: ராகுல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் "தனது சகோதரியை விட சிறந்த பிரநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது" என்று ராகுலி காந்தி தெ... மேலும் பார்க்க

எப்போது கரையை கடக்கிறது டானா புயல்? தயாராகிறதா ஒடிசா?

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், அது அக்டோபர் 24ஆம் தேதி ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் ... மேலும் பார்க்க

ரஷியா சென்றடைந்தார் மோடி!

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.இரண்டு நாள் பயணமாக ரஷியாவின் கசானுக்கு இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

பெங்களூரு சாலைகளில் படகில்தான் செல்ல முடியும்..! மக்கள் ஆதங்கம்

பெங்களூரு சாலைகளில் கனமழையால் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(அக். 21) இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு நீதிமன்றம் சம்மன்!

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாகப் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்ப... மேலும் பார்க்க