செய்திகள் :

பிகாரில் கள்ளச்சாராய பலி 33 ஆக உயர்வு!

post image

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

பிகார் மாநிலத்தில் சிவான் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவான், பசந்த்பூர், பாட்னா மருத்துவமனைகளில் மொத்தம் 79 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் சிவான் மாவட்டத்தில் மட்டும் உயிரிழப்பு 28 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மற்றொரு சம்பவத்தில், சரண் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு 33 ஆக அதிகரித்துள்ளது.

காவல்துறை இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா கூறியுள்ளார்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பிகாரில் முழுமையாக மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோப்பு டப்பாக்குள் ரூ. 5.5 கோடி?

அஸ்ஸாமில் சோப்பு டப்பாக்குள் வைத்து போதைப்பொருளைக் கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அஸ்ஸாமில் குவஹாட்டி நகரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமைய... மேலும் பார்க்க

அப்பாஸ் அன்சாரிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரிக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதிகள் எம்எம.சுந்தரேஷ் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பாஸ் அன்சாரிக்கு விடுதலை வழ... மேலும் பார்க்க

தீயணைப்பு அதிகாரிகளின் தாமதத்தால் இருவர் பலி: மக்கள் குற்றச்சாட்டு!

தில்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதமே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தில்லியில் ஷஹதாரா பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி அடுக்ககத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: முதல் கட்ட வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்... மேலும் பார்க்க

சல்மான் கான் கொலை முயற்சியில் சமரசம் செய்ய ரூ. 5 கோடி கோரிய பிஷ்னோய் கும்பல்!

ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீதான கொலை முயற்சியை கைவிடுவதற்கு ரூ. 5 கோடி கேட்டு, பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் ... மேலும் பார்க்க