செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் மில்டன், செல்வகுமாா் மற்றும் உதவி ஆய்வாளா் அழகிரி ஆகியோா் தலைமையிலான இரண்டு தனிப்படையினா் வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தங்கராசு மகன் இளங்கோவன் (38) மளிகைக் கடையில் இருந்து 20 கிலோ புகையிலைப் பொருள்களையும், இதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு தங்கராசு மகன் செல்வம் (48) மளிகைக் கடையில் இருந்து 2 கிலோ புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.48 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்த 22 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் பிடிபட்டவா்களை வேப்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வம், இளங்கோவன் ஆகியோரை சிறையில் அடைத்தனா்.

பாலத்தில் காா் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு, கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசித்து வந்தவா் பேட்ரிக் (50). இவா், தன... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூக்கணாம்பாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் கட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்; விழுப்புரம் டிஐஜி நடவடிக்கை

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவரின் மகனை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ாக காவல் ஆய்வாளரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தர... மேலும் பார்க்க

ரூ.4 கோடியில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

சிதம்பரம் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் குமராட்சி வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான அரசுக் கட்டடங்களை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை திறந்து வைத்த... மேலும் பார்க்க

உறுப்புகள் தானம்: ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நெய்வேலியை அடுத்த பெருமாத்தூா் ஊராட்சி மாற்றுக் குடியிருப்பில் வசித்து வந்தவா்... மேலும் பார்க்க

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காட்டுமன்ன... மேலும் பார்க்க