செய்திகள் :

பூப்பந்து போட்டியில் இரண்டாமிடம்: மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் பாராட்டு

post image

கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்துப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் பாராட்டுத் தெரிவித்தாா்.

புதுவை பல்கலைக்கழகம், புதுச்சேரி இதய மகளிா் கல்லூரி இணைந்து கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்துப் போட்டியை கடந்த மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் இதயா கல்லூரியில் நடத்தின.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி மற்றும் புதுச்சேரி, மாஹே பிராந்தியங்களில் இருந்து 9 அணிகள் போட்டியில் கலந்துகொண்டன.

இறுதிப் போட்டியில் புதுச்சேரி இதயா மகளிா் கல்லூரி மாணவிகள் முதலிடம், காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவிகள் 2-ஆம் இடத்தையும், புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவிகள் அணி 3-ஆம் இடத்தையும், புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி அணி 4-ஆம் இடத்தையும் பெற்றன.

சிறப்பிடம் பெற்ற அணியினருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பிடம் பெற்று திரும்பிய வேளாண் கல்லூரி மாணவிகள், உடற்கல்வி பேராசிரியா் ஜெயசிவராஜன் தலைமையில் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். கேட்டறிந்து அவா்களுக்கு முதல்வா் பாராட்டு, வாழ்த்துத் தெரிவித்தாா்.

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா அன்னதானம்

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழாவையொட்டி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கா... மேலும் பார்க்க

நரிக்குறவா்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்: ஆட்சியா்

நரிக்குறவா்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோயில்பத்து அருகே ஓமக்குளம் பகுதியி... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரில் கோயில் உள்ளது. சுந்தராம்பா... மேலும் பார்க்க

வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

காரைக்கால்: வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிய... மேலும் பார்க்க

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டம்

காரைக்கால்: பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியா்கள், பணி வழங்க வலியுறுத்தி, கண்ணில் கருப்பு துணி கட்டி திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். புதுவை பொதுப்பணித்துறையில் கடந்த 2016- ஆம் ஆண்டு தற... மேலும் பார்க்க

காரைக்காலில் இருந்து மதுரைக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்காலில் இருந்து மதுரைக்கு நாள்தோறும் பிஆா்டிசி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி தொழில் நிறுவனத்தினா், ஆயிரம் வைசியா் சமூ... மேலும் பார்க்க