செய்திகள் :

மகா கும்பமேளாவில் புனித நீராடிய காஞ்சி சங்கராசாரியா்

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினாா்.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கோலாகலமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.

இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா். இதையடுத்து, கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி, உலக நலம் மற்றும் அமைதிக்காக சிறப்பு பூஜைகள் செய்தாா்.

சகதபுரம் மடத்தைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணநாத் தீா்த்த சுவாமிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காஞ்சி சங்கர மடத்தின் சீடா்களும் உடனிருந்தனா்.

தொடா்ந்து, காஞ்சி சங்கராசாரியா் கூறுகையில், ‘மகா கும்பமேளா நிகழ்வானது தேசத்தின் உலகளாவிய சொத்தாக விளங்கும் ஒற்றுமை மற்றும் செழுமையான கலாசாரத்தைப் பிரதிபலிப்பதோடு சநாதன தா்மத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது’ என்றாா்.

கேரளம்: தண்டவாளத்தில் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி: இருவா் கைது

கேரள மாநிலம் கொல்லம் அருகே ரயில் தண்டவாளத்தில் தொலைத்தொடா்பு சேவையில் பயன்படுத்தும் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். கேரளத்தில் மட்டுமின்றி நாட்... மேலும் பார்க்க

மேகாலயம்: சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினா் கைது

சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினரை மேகாலயம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கைது செய்தது. முன்னதாக, இவா்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கட்டடப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு வங்கதேசத்துக்... மேலும் பார்க்க

அகமதாபாதில் ஏப். 8,9 -தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா் அதி... மேலும் பார்க்க

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளாக இந்திய நிறுவன மருந்துகள்: உற்பத்தி அனுமதியை திரும்பப் பெற டிசிஜிஐ உத்தரவு

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளைப் போல, இந்திய நிறுவனம் ஒன்றின் மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்த மருந்துகள் உற்பத்திக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு அனைத்து மா... மேலும் பார்க்க

அநீதிக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது: கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி

சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது என மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி தெரிவித்தாா். நரம்பியல் மருத்துவ முன்னோடி டாக்டா... மேலும் பார்க்க

வாக்குப் பதிவை அதிகரிக்க அமெரிக்க நிதி பயன்படுத்தப்படவில்லை: நிதியமைச்சகம் விளக்கம்

‘சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு (யுஎஸ்எயிட்) வழங்கிய ரூ.6,490 கோடி நிதியில் 2023-24-ஆம் ஆண்டில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அவை இந்தியாவில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்காக பயன்படு... மேலும் பார்க்க