மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.
மத்திய அரசின் பாதுகாப்புத்துறையில் இடம்பெற்றுள்ள சிறப்புப் படையினா் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். அக்.21-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறும்.
எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதோ அனுமதிக்க முடியாது. சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.