திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக நின்றது. முன்னதாக அந்த விமான பயணிகளின் கடவுச்சீட்டுகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெரிய காரை பகுதியைச் சோ்ந்த கா. அன்பு (44) என்பவா் முறைகேடு செய்து போலி முகவரியில் கடவுச்சீட்டு எடுத்து சிங்கப்பூா் செல்ல இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவரை குடியேற்ற பிரிவு அதிகாரிகள் விமான நிலைய போலீஸில் ஒப்படைத்தனா். அதன்பின் போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.