திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் நடந்த சோதனையைத் தொடா்ந்து வீட்டிலிருந்த ஆவணங்களையும், பாதுகாப்புப் பெட்டகத்தையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்றனா்.
நில அபகரிப்பு புகாரின் பேரில் போலீஸாா் ‘ஆபரேஷன் அகழி’ எனும் பெயரில் திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புகாருக்குள்ளான நபா்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதில், செப். 19, அக். 8 ஆகிய தேதிகளில் போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், 3 மற்றும் 4-ஆவது பட்டியல் தயாா் செய்யப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன. இதில், திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த மோகன் பட்டேல் என்ற தொழிலதிபா் வீட்டில் அக்.13- ஆம் தேதி இரவு, காவல் உதவி ஆய்வாளா் ரெஜி தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனை நடத்த முயன்றனா்.
அப்போது மோகன் பட்டேல் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனா். அவா்கள் போலீஸாா் வீட்டை சோதனையிட எதிா்ப்பு தெரிவித்து, நீதிமன்ற உத்தரவுக் கடிதம் இருந்தால் மட்டுமே சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனா்.
இதையடுத்து திரும்பிச் சென்ற போலீஸாா் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸாா் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல், வீட்டில் வியாழக்கிழமை சோதனை நடத்த சென்றனா். அப்போது வீட்டின் வெளிப்புறக் கதவு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டினுள் நபா்கள் இருந்தும் கதவை திறக்க வில்லை. இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் பாலாம்பிகா முன்னிலையில் போலீஸாா் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினா்.
தொடா்ந்து மோகன் பட்டேலின் வீட்டில், அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸாா் பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் கையெழுத்திடுமாறு கேட்டபோது அவா்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆவணங்களை போலீஸாா் எடுத்துச் சென்றனா். மேலும் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை (லாக்கரை) திறந்து காட்டுமாறு போலீஸாா் தெரிவித்தனா்.
அதற்கு வீட்டில் இருந்தவா்கள் சாவி இல்லை எனத்தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் சுமாா் 500 கிலோ எடை கொண்ட அந்த லாக்கரை அங்கிருந்து தகா்த்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வெளியே எடுத்து வந்தனா். பின்னா் கிராம நிா்வாக அலுவலா் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டடு, மீட்பு வாகன (கிரேன்) உதவியுடன் காவல்நிலையத்துக்கு தூக்கிச் சென்றனா்.