திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் பொ. பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மணப்பாறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக்.19) மாதாந்திர பராமரிப்புகள் நடைபெறுவதாகவும், இதனால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாக காரணங்களால் இந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது. மாதாந்திர பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.