செய்திகள் :

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

post image

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயதான பெண் ஒருவர், திங்கள்கிழமை (அக். 21) நள்ளிரவில் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில், அவரைக் கண்ட 20 வயதான இளைஞர், தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, அந்த வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர், பெண்ணைக் கண்டதும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், அடையாளம் தெரியாத நபர் மீதான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கண்டறிந்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இதையும் படிக்க:கனடாவில் இந்திய சீக்கிய பெண் மர்ம மரணம்!

பட்டப்பகலில் சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

பஞ்சாபில் விவசாயிகளின் ஏஜென்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பஞ்சாபின் அமிர்தசரஸில் குர்தீப் சிங் என்பவர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏஜென்டுபோ... மேலும் பார்க்க

பெங்களூரு: 100 வீடுகளைச் சூழ்ந்த கனமழை வெள்ளம்

பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.பெங்களூருவின் தெற்கு பகுதிகளில் புதன்கிழமை (அக். 23) மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, எலச்செனஹள்ளியில் உள்ள ராமகிருஷ... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய இராக்!

இஸ்ரேல் எல்லைகளில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு இராக்கைச் சேர்ந்த ஷியா ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக ஷியா ஆயுதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் எலியாட் பகுதியில் இரு டிரோன... மேலும் பார்க்க

வாக்களிப்பது எப்படி? தொகுதிவாரியாக விழிப்புணர்வு வாகனங்கள்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்தும் சரிபார்ப்பு இயந்திரம் (விவிபேட்) குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தில்லியி... மேலும் பார்க்க

தில்லியில் மாசுக்குக் காரணம் பாஜகவின் மோசமான அரசியல்: அதிஷி

தலைநகரில் அதிகரித்துவரும் காற்றும் மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என தில்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டினார். வஜிராபாத் தடுப்பணையைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியது, ஹரியாண... மேலும் பார்க்க

ஆசிரியர் தாக்கியதில் மூளைக்காயம்: சிறுமிக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை

மும்பை: டியூசன் ஆசிரியர், காதுக்கு அருகே இரு முறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த 9 வயது சிறுமி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பார்க்க