செய்திகள் :

வாக்களிப்பது எப்படி? தொகுதிவாரியாக விழிப்புணர்வு வாகனங்கள்!

post image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்தும் சரிபார்ப்பு இயந்திரம் (விவிபேட்) குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தில்லியில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு வாகனங்களை அனுப்பி, வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி திட்டமிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திலுள்ள 70 தொகுதிகளுக்கும் 70 வாகனங்கள் அனுப்பப்படவுள்ளன.

மொபைல் வேன்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.

இது குறித்து பேசிய தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என ஒவ்வொரு பொதுத்தேர்தலின்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சரிபார்ப்பு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் உள்ள அடிப்படை அம்சங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இவிஎம்-மில் வாக்களிக்கும் முறைகள் விளக்கப்பட்டு, விவிபேட் இயந்திரத்தில் அதனை உறுதிப்படுத்துவது என படிப்படியாக எடுத்துரைக்கப்படும்.

இந்த முயற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படும். இந்த வாய்ப்பை தில்லி மக்கள் தவறாது பயன்படுத்திக்கொண்டு, முறையாகத் தெரியாததால், வாக்களிப்பதற்கு ஆகும் நேர விரயத்தை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

பட்டப்பகலில் சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

பஞ்சாபில் விவசாயிகளின் ஏஜென்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பஞ்சாபின் அமிர்தசரஸில் குர்தீப் சிங் என்பவர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏஜென்டுபோ... மேலும் பார்க்க

பெங்களூரு: 100 வீடுகளைச் சூழ்ந்த கனமழை வெள்ளம்

பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.பெங்களூருவின் தெற்கு பகுதிகளில் புதன்கிழமை (அக். 23) மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, எலச்செனஹள்ளியில் உள்ள ராமகிருஷ... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய இராக்!

இஸ்ரேல் எல்லைகளில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு இராக்கைச் சேர்ந்த ஷியா ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக ஷியா ஆயுதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் எலியாட் பகுதியில் இரு டிரோன... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயதான பெண் ஒருவர், திங்கள்கிழமை (அக். 21) நள்ளிரவில் சால... மேலும் பார்க்க

தில்லியில் மாசுக்குக் காரணம் பாஜகவின் மோசமான அரசியல்: அதிஷி

தலைநகரில் அதிகரித்துவரும் காற்றும் மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என தில்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டினார். வஜிராபாத் தடுப்பணையைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியது, ஹரியாண... மேலும் பார்க்க

ஆசிரியர் தாக்கியதில் மூளைக்காயம்: சிறுமிக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை

மும்பை: டியூசன் ஆசிரியர், காதுக்கு அருகே இரு முறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த 9 வயது சிறுமி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பார்க்க