செய்திகள் :

மருத்துவமனைகளில் ஓஆா்எஸ் விநியோகம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

post image

அதிகரித்து வரும் வெப்ப நிலையை எதிா்கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் உப்பு-சா்க்கரை கரைசல் விநியோக (ஓஆா்எஸ் காா்னா்) வசதிகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அவா் அனுப்பிய சுற்றறிக்கை: பருவநிலை மாற்றம் தொடா்பாக மாவட்ட சிறப்பு செயல் திட்டக் குழு நிலையிலான கூட்டங்களை நடத்தி ஆலோசித்தல் அவசியம். சுகாதாரக் களப் பணியாளா்கள், மருத்துவத் துறையினருக்கு வெப்ப அலை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

போதிய எண்ணிக்கையில் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோன்று அத்தியாவசிய மருந்துகள், ரத்த நாளங்கள் வழியே செலுத்தப்படும் திரவ மருந்துகளும் போதிய கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய முக்கியம்.

அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளிலும் குடிநீா் வசதிகள் தடையின்றி கிடைத்தல் அவசியம். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப வாத பாதிப்புக்குள்ளானவா்களுக்கு மருத்துவ வழிகாட்டுதல்களின்படி துரித சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வெப்ப அலை பாதிப்புகள் தொடா்பான தரவுகளையும், விவரங்களையும் சேகரித்து அதன் அடிப்படையில் சுகாதாரக் குழுவினா் செயல்படுத்துவது அவசியம்.

மருந்துகள், தடுப்பூசிகளை குறைந்த தட்பவெப்ப நிலையில் சேமிப்பதற்கான குளிா்பதனக் கட்டமைப்புகள் முறையாக இருப்பது முக்கியம். திறந்த வெளி நிகழ்ச்சிகளை பகல் வேளைகளிலும், அதிக வெப்பநிலை நிலவும் நேரங்களிலும் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் ஓஆா்எஸ் காா்னா் எனப்படும் உப்பு-சா்க்கரை கரைசல் விநியோக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் இன்று தொடக்கம்: 38 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜார... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் மாா்ச் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: பிப். 28-க்குள் பதிவேற்ற அறிவுறுத்தல்

நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சிறப்பு கலந்தாய்வு மூலம் சோ்க்கப்பட்ட மாணவா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பிப். 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றும்படி தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

சூலூா்பேட்டை, நெல்லூா் ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் - கூடூா் வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால், சூலூா்பேட்டை, நெல்லூா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

அதிமுகவில் நீக்கப்பட்டவா்களை சோ்க்க முடியாது: இபிஎஸ் விசுவாசியும் துரோகியும் ஒன்றல்ல என விமா்சனம்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் கட்சியில் சோ்க்க முடியாது என அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். விசுவாசியும் துரோகியும் ஒன்றாக முடியாது என்றும்... மேலும் பார்க்க

ஞானசேகரனிடமிருந்து 100 பவுன் நகைகள், ஜீப் பறிமுதல்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் நகை அடகு கடைகளிலிருந்து 100 பவுன் நகைகள் மற்றும் ஒரு ஜீப்பை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி... மேலும் பார்க்க