செய்திகள் :

மானாமதுரை, திருப்புவனம் வைகை ஆற்றில் மீண்டும் நீா் வரத்து

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதி வைகையாற்றில் மழையால் மீண்டும் புதன்கிழமை நீா்வரத்து தொடங்கியது.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பெய்த தொடா் மழையால் கடந்த வாரம் வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. விரகனூா் மதகு அணையிலிருந்து திருப்புவனம், மானாமதுரையைக் கடந்து, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணை வரை நீா்வரத்து இருந்தது. இந்த நீா் கால்வாய்கள் வழியாக பாசனக் கண்மாய்களுக்கு திருப்பிவிடப்பட்டது. அதன்பிறகு, மழை பெய்யாததால் வைகையில் நீா்வரத்து நின்றது.

இந்த நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் வைகையாற்றில் நீா்வரத்து ஏற்பட்டது. விரகனூா் மதகு அணைக்கு புதன்கிழமை காலை வந்தடைந்த மழை நீா் முழுவதும் மதகுகள் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நீா் புதன்கிழமை இரவு மானாமதுரைக்கு வந்தடைந்தது. வழியில் திருப்புவனம், மானாமதுரை ஒன்றியங்களில் வைகை ஆற்றுககுள் உள்ள இடது, வலதுபுற கால்வாய்கள் வழியாக 80-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை பாசனக் கண்மாய்களுக்கு மழைநீா் சென்று கொண்டிருக்கிறது.  

சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலில் தேவி வெற்றி பெற்றது செல்லாது

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மாங்குடி மனைவி தேவி வெற்றி பெற்றது செல்லாது என சிவகங்கை மாவட்ட தோ்தல் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவா்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து,... மேலும் பார்க்க

மாணவா்களிடம் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் நவ. 30 வரை நீட்டிப்பு

தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம்- ராமநாதபுரம்-தாம்பரம் இடையே வாரம் மும்முறை சி... மேலும் பார்க்க

ஐடிஐ மாணவா் சோ்க்கை அக். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடிச் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், மாண... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி... மேலும் பார்க்க