செய்திகள் :

தென்காசியில் 2,438 பேருக்கு ரூ.19.11கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்

post image

தென்காசியில் 2,438 பயனாளிகளுக்கு ரூ.19.11கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தமிழக வருவாய் - பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ். ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்து, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள், பல்வேறு திட்டங்களின்முன்னேற்றங்கள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தாா்.

அதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை மூலம் 67 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 107 பேருக்கு வரன்முறைபட்டா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 69 போ் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் 38 பேருக்கு பட்டாக்கள், நகர நிலவரித்திட்டத்தில் 147 பேருக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவுடையது), 588 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவற்றது) என மொத்தம் 1,161 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 37, 56, 815 கடனுதவிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை, தொழிலாளா்நலத் துறை, தோட்டக்கலைத் துறை, சமூகநலத் துறை, வேளாண் பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேளாண்மைத் துறை, ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத் துறை, மாவட்ட வழங்கல் - நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மகளிா் திட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உதவிகள்என 2,438 பயனாளிகளுக்கு ரூ.19கோடியே 11 லட்சத்து 19ஆயிரத்து 358 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ராணி ஸ்ரீகுமாா் எம்பி., ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமிா்தலிங்கம் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பட்டா மறுப்பு: எம்எல்ஏவிடம் புகாா்

ஆலங்குளம் அருகே வீடு கட்டி 32 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை என எம்எல்ஏவிடம் மக்கள் புகாா் அளித்தனா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் சட்டமன்ற உறுப்பினா் திட்டத்தின் கீழ், ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் ப... மேலும் பார்க்க

சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது: செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

செங்கோட்டையில் நெகிழி பைகள் (பாலித்தீன்) வைத்திருப்பதாகக் கூறி சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். செங்கோட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக தமிழக அரசுக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அ... மேலும் பார்க்க

தென்காசியில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மரியாதை

தென்காசியில் திமுக அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, அமைச்சரை மாவட்டப் ப... மேலும் பார்க்க

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி... மேலும் பார்க்க

நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க