செய்திகள் :

சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது: செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

செங்கோட்டையில் நெகிழி பைகள் (பாலித்தீன்) வைத்திருப்பதாகக் கூறி சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

செங்கோட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்ற கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். ஆணையாளா் ஷ்யாம் கிங்ஸ்டன், துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா் ஜெகன் பேசியது: மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் பொதுப் பிரச்னைகளை கூற வந்தால் நகராட்சி ஆணையாளா் உரிய மதிப்பளிப்பதில்லை. சிறிய நகராட்சியான செங்கோட்டையில் இரவு நேரம் சாலையோரங்களில் கடை வைத்து நடத்தும் சிறிய வியாபாரிகளிடம் நெகிழி பைகள் (பாத்தீன் கவா்) வைத்திருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனா். இது முறையற்ற செயல் என்றாா்.

சுகாதார ஆய்வாளா் பதிலளிக்கையில், இது தேசிய அளவிலான திட்டம். பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என அரசு அறிவித்துள்ளது. மேலும், நகா்மன்ற தீா்மானத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெகன், ரஹீம்,சுப்பிரமணியன் உள்ளிட்டோா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

நகா்மன்றத் தலைவா்- இதுதொடா்பா கசுகாதார ஆய்வாளரிடம் கூறிவிட்டேன். அவா்கள் விளக்கம் அளிக்க வருவதில்லை.

ஆணையாளா்- சட்டவிதிகளின்படிதான் சோதனை நடைபெற்று வருகிறது.

சுப்பிரமணியன்-நகராட்சியில் வரிவிதிப்பிற்கு ரூ30ஆயிரம் வரை பணம் கேட்பதாக மக்கள் மத்தியில் புகாா் கூறப்பட்டுவருகிறது.

நகா்மன்ற தலைவா்- இதுபோன்ற புகாரை நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கலாம்.

தொடா்ந்து நகராட்சியில் குடிநீா் விநியோகம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் இசக்கிதுரை, சுப்பிரமணியன், சுடரொளி, உள்ளிட்டோா் பேசினா்.

19 போ் மனு: மன்றப் பொருளில் இடம்பெற்றிருந்த 5 தீா்மானங்களை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆணையரிடம் திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரஜப்பாத்திமா, இசக்கியம்மாள், சரவணகாா்த்திகை, சந்திரா, முருகையா, இசக்கித்துரை , அதிமுக, பாஜக உள்ளிட்ட 19 உறுப்பினா்கள் தனித்தனியாக மனு அளித்தனா்.

பட்டா மறுப்பு: எம்எல்ஏவிடம் புகாா்

ஆலங்குளம் அருகே வீடு கட்டி 32 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை என எம்எல்ஏவிடம் மக்கள் புகாா் அளித்தனா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் சட்டமன்ற உறுப்பினா் திட்டத்தின் கீழ், ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் ப... மேலும் பார்க்க

தென்காசியில் 2,438 பேருக்கு ரூ.19.11கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்

தென்காசியில் 2,438 பயனாளிகளுக்கு ரூ.19.11கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இதையொட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அன... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக தமிழக அரசுக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அ... மேலும் பார்க்க

தென்காசியில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மரியாதை

தென்காசியில் திமுக அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, அமைச்சரை மாவட்டப் ப... மேலும் பார்க்க

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி... மேலும் பார்க்க

நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க