செய்திகள் :

`முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்; திராவிடம் என்பது இனம் அல்ல இடம்’ - ஹெச்.ராஜா எச்சரிக்கை!

post image

வேலூரில், பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``பகுத்தறிவு பற்றிப் பேசுகிற இந்த திராவிட கூட்டத்திற்கு நாகரிகம் தெரியவில்லை. ஒரு வரி விட்டுப் போனதற்கு ஆளுநரை ஏன் விமர்சிக்க வேண்டும்? அது பாடியவரின் தவறு. `பாடியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டால், நீங்கள் மனநோயாளிகள் கிடையாது. நடுநிலைப் புத்தியுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், ஆளுநரைப் பேசினால், இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, பொறுப்புணர்ந்து பேச வேண்டும். பாடுகிறவரிடம், `இந்த வரி பாடாதே...’ என யாராவது சொல்வார்களா?

ஹெச்.ராஜா

எப்போதும் பாடுகிறவர் அன்று வரவில்லை. புதிய நபர்களை பாடச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட தவறுதான். தமிழக அரசு எல்லை மீறுகிறது. முதல்வர் ஸ்டாலின் மகன் வெறுப்பு அரசியல் செய்கிறார்; மோசமாக பேசுகிறார். பண்பாடு இல்லாத இந்தக் கூட்டம் இந்து மதத்துக்கு எதிரானது. திராவிடம் என்பது இனத்தைக் குறிப்பது அல்ல, இடத்தை குறிப்பது. இவர்களே இவர்களுக்கான எதிரிகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்த 3 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளும் மிக மோசமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர்கள் மனநோயாளிகள். இந்த நேரத்தில், தமிழகத்தைக் காப்பாற்றிய வருண பகவானுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

Pannun Murder Plot: காலிஸ்தான் தலைவரை கொல்ல ஸ்கெட்ச்; Ex-RAW Agent மீதான FBI புகாரும் பின்னணியும்

அமெரிக்க குடியுரிமையை பெற்ற இந்திய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன்னை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக விகாஸ் யாதவ் என்ற இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி ம... மேலும் பார்க்க

Udhayanidhi : `அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்!' - தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

"ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என்று தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ... மேலும் பார்க்க

`சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா? ஆணவம் நல்லதல்ல...’ - காட்டமான உயர் நீதிமன்றம்!

சிதம்பரம்: `தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல!’ - நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற பெண் பக்தை ஒருவரை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக, தர்ஷன் (எ) நடர... மேலும் பார்க்க

வாரிசுக்காக கொடுத்து வாங்கும் சகோதரர்கள்: உத்தவைத் தொடர்ந்து மகனை தேர்தலில் இறக்கும் ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிரோடு இருந்தவரை அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முதன் முதலில் உத்தவ் தாக்கரே ... மேலும் பார்க்க