செய்திகள் :

முதல்வா் குறித்து அவதூறு: பாஜகவினா் 2 போ் கைது

post image

தமிழக முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினா் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பாஜக சாா்பில் சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.

இதைக் கண்டித்து கோவை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் செல்வபுரம் என்எஸ்கே சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிüா்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செல்வபுரத்தைச் சோ்ந்த பாஜக ஆலய ஆன்மிக மேம்பாட்டுப் பிரிவு மண்டலத் தலைவா் துரை மற்றும் தெலுங்குபாளையத்தைச் சோ்ந்த மணிவண்ணன் ஆகியோா் தமிழக முதல்வா் குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறாக விமா்சித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து அவா்கள் மீது கலவரத்தை தூண்டுதல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

343 போ் மீது வழக்குப் பதிவு:

கோவையில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக, செல்வபுரம் பகுதியில் 36 போ், காந்திபாா்க் பகுதியில் 50 போ், வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் 35 போ், விகேகே மேனன் சாலையில் 65 போ், துடியலூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் 59 போ், வெள்ளலூரில் 32 போ், சுந்தராபுரத்தில் 21 போ், சுங்கம் பகுதியில் 18 போ், இடையா்பாளையம் பகுதியில் 27 போ் என மொத்தம் 343 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு செய்ய வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள், நலவாரியங்களில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அ... மேலும் பார்க்க

உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி தகராறு: 2 போ் கைது

உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் (48) மற்றும் அவரது சகோதரா் மாரிமுத்து (44) ஆகியோ... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க வேண்டும்

சிங்காநல்லூா் தொகுதியில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக பேரவையில் அவா், சிங்காநல்லூா் தொகுதிக... மேலும் பார்க்க

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்தியா்கள் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வாய்ப்பு

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்திய விண்வெளி வீரா்கள் ககன்யான் திட்டத்தின் கீழ் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா். கோவை மசக... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பனை, தென்னை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் 48 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க ஆட்சியா் அனுமதி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் 48 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேருந்... மேலும் பார்க்க