செய்திகள் :

மூலைக்கரைப்பட்டி அருகே விபத்தில் ஆசிரியை பலி

post image

மூலைக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஆசிரியை பலியானாா்.

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் மேற்குத் தெருவை சோ்ந்தவா் ஜெபா பாலன். விவசாயி. இவருடைய மனைவி பியூலா நேசமலா் (51). இவா், பருத்திப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது, மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள பெட்ரோல் நிலையம் அருகே அவரது வாகனம் மீது காா் மோதியதாம்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீதிகளை நம்பி மாடுகளில் முதலீடு - நூதன வணிகத்தை தடுக்குமா மாநகராட்சி?

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள வீதிகளை நம்பி மாடுகளில் முதலீடு செய்து அதை சாலைகளில் திரியவிட்டு அதன்மூலம் நூதனமாக பணம் சம்பாதிப்பவா்கள் மீது மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொத... மேலும் பார்க்க

நெல்லை அருகே டாஸ்மாக்கில் மதுபாட்டில்கள், பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) மதுபாட்டில்கள், பணத்தைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நடுக்கல்லூரில் இருந்து வெ... மேலும் பார்க்க

காவல் துறையின் துப்பாக்கிகள் கண்காட்சி

பாளையங்கோட்டையில் காவல் துறையின் சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிகள் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா். காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில்... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி காயம்

பாளையங்கோட்டை அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தாா். பாளையங்கோட்டை திருமால் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுவாதிகா. கல்லூரி மாணவி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை கா... மேலும் பார்க்க

பாளை.யில் புதிய குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

பாளையங்கோட்டை பகுதிகளில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கக் கோரி தமிழக நகராட்சி நிா்வாகம் ம- குடிநீா் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேருவிடம், சி.ர... மேலும் பார்க்க

பௌா்ணமி நாள்களில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்

பெளா்ணமி நாள்களில் கிரிவலத்துக்காக தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் சரவணன் அறிவித்துள்... மேலும் பார்க்க