செய்திகள் :

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

post image

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.

வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, சேவையை மேம்படுத்துவதிலும் வாட்ஸ்ஆப்-க்கு முதலிடம்.

அந்த வகையில், தற்போது மீண்டும் பல வசதிகளை வாட்ஸ்ஆப் உருவாக்கி வருகிறது. தற்போது பீட்டா இணையதளத்தில் அப்டேட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அவற்றில் மிகவும் சிறப்பான சேவைகள் பற்றி..

தற்போது, வாட்ஸ்ஆப், சாட்ஸ், குழுக்கள், அழைப்புக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

தற்போது, விடியோ மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான ஐகான்கள், செயலியின் மேல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், தற்போது, தனியே அழைப்பு மெனுவை உருவாக்கி, அதில் பல்வேறு சிறப்புகளை சேர்த்துள்ளது.

குழு அழைப்பிலும் மாற்றம்

புதிய அழைப்பு மெனுவில், ஒரு குழுவில் இருக்கும் அனைவரையும் ஒரே நேரத்தில் அழைக்காமல், குழுவில் ஒரு சில பயனர்களை மட்டும் முதலில் அழைத்து, அவர்களுடன் பேசிவிட்டு, பிறகு மற்ற அனைவரையும் குழு அழைப்பில் சேர்த்துக் கொள்ளும் வசதி வருகிறது.

எளிதாக ஒருவருக்கு அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத அழைப்புகளைத் தவிர்க்க..

கையில் தெரியாமல் பட்டு எதிர்பாராமல் சிலருக்கு அழைப்பு சென்றுவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க அதில் ஒரு புதிய ஆப்ஷன் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒருவருக்கு அழைப்புக்கான பொத்தானை அழுத்திவிட்டாலும் கூட, அழைப்பை மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வரும். அதனை கிளிக் செய்தால் மட்டுமே அழைப்பு மேற்கொள்ளப்படும். வேண்டாம் என்றால், அதனை கேன்சல் செய்துவிடலாம். இதனால் எதிர்பாராத அழைப்புகள் செய்து தர்மசங்கடத்தில் சிக்க வேண்டாம்.

இவை அனைத்தும் தற்போது உருவாக்கத்தில் உள்ளன. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ச... மேலும் பார்க்க

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, "என்எக்ஸ... மேலும் பார்க்க